Saturday, April 12, 2014

385 TNPSC QUESTION ANSWERS

385 TNPSC QUESTION ANSWERS

1.”மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19
10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை
11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
42
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்?
அபிதான கோசம்
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?
5
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?
எதுகை
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?
அந்தாதி
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
உருவகம்
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்?
அழ. வள்ளியப்பா
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?
அடுக்குத் தொடர்
21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்
22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி
23. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது
24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
தமிழின் பழமை
25. இரண்டாம் வேற்றுமை உருபு?

26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு
27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை
28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
29. ”தளை” எத்தனை வகைப்படும்?
7
30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி
31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?
8
32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?
3/4
33. திராவிட மொழி____________?
ஒட்டு நிலைமொழி
34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
இளம் பூரணார்
35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
இடமிருந்து வலம்
36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
எமனோ
37. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
தண்டியலங்காரம்
38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
3
39. களவியலுக்கு உரை எழுதியவர்?
நக்கீரர்
40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது?
3 (எழுத்து, சொல், பொருள்)
41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
43. முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்?
தன்வினை
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி
48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
திருமூலர்
49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?
”ட” கர மெய்
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது?
மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
சத்திமுத்தப் புலவர்
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
நேர்
54. வெண்பா எத்தனை வகைப்படும்?
5
55. அடியின் வகை?
5
56. வஞ்சிப்பாவின் ஓசை?
தூங்கலோசை
57. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
3
58. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?
இலக்கணப்போலி
59. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?
இடக்கரடக்கல்
60. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பலாச்சுளை
61.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?
நக்கீரர்
62. அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?
சரி
63. தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?
பொங்கல்
64. பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?
கரிகாலன்
65. பொய்கையார் இயற்றிய இலக்கியம்?
களவழி நாற்பது
66. வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்?
கரிகாலன்
67.முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?
காய்ச்சின வழுதி
68. பல்யானை செங்குட்டுவன் தந்தை?
உதயஞ்சேரலாதன்
69. கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?
இரும்பொறை பிரிவு
70. தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்?
பெருஞ்சேரல் இரும்பொ
71.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?
வெண்ணிப் போர்
72. திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்
கரிகாலன்
73. கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்?
களவழி நாற்பது
74. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
75. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?
ஓரி
76. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?
பொதிகை மலை
77. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?
பாரி
78. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
காரி
79.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
பாரதிதாசன்
80.”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?
உரிச்சொல்
81.மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8
82. ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
முற்றெச்சம்
83. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?
அழ. வள்ளியப்பா
84. ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
நன்னெறி
85. ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?
இரட்டைக்கிளவி
86. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
பாரதியார்
87.”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
பாரதிதாசன்
88. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
கவிமணி
89. ”மறவன்” எனும் சொல்லின் பொருள்?
வீரன்
90. ”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?
அவ்வையார்
91. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர்
92. தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?
லத்தீன்
93. ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்?
முல்லை
94. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
95. இடைச்சங்கம் இருந்த இடம்?
கபாட புரம்
96.”சித்திரப்பாவை”-ஆசிரியர்?
அகிலன்
97. ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?
பரஞ்சோதி முனிவர்
98. ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?
திரு.வி.க.
99. ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
பாரதியார்
100. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர்?
நாமக்கல் கவிஞர்
101.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு
102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது?
பாடு
103. ”கட கட” என்பது?
இரட்டைக்கிளவி
104. ”முகமை” என்பதன் பொருள் என்ன?
கிடங்கு
105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.
தோப்பு
106. ”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?” என்று பாடியவர் யார்?
அழ. வள்ளியப்பா
107. ”மாரிக் காலம்” என்றால் என்ன?
மழைக்காலம்
108. அ___ல் எங்கே போகிறது?
ணி
109. இ___ ___ ர். பூர்த்தி செய்க?
ள, நீ
110. பணிப்பென் என்பதன் பொருள் என்ன?
வேலைக்காரி
111. சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
112. இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
பரசுராமன்
113. ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
114. மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
கோவர்த்தன மலை
115. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
2008
116. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
தமிழ்
117. மூதுரையை இயற்றியவர் யார்?
அவ்வையார்
118. யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?
நல்லவர்
119. ”மூதுரை”-இயற்றியவர்?
அவ்வையார்
120.”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?
பாரதிதாசன்
121.”திருக்குறள்”-இயற்றியவர்?
திருவள்ளுவர்
122.”நறுந்தொகை”-இயற்றியவர்?
அதிவீரராம பாண்டிய
ன்
123. காலையில் __________ நன்று?
படித்தல்
124. மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி?
விளையாடுதல்
125. தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான்.
உயிர்
126. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
அதிவீரராம பாண்டியன்
127. பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்?
தானம்
128. பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?
குழந்தைகள்
129. அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________?
வளரும்
130. வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்?
இயற்கை
131. தங்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது?
ஏறி
132. சொற்கள் எத்தனை வகைப்படும்?
4
133. காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?
வினைச் சொல்
134. காலம் எத்தனை வகைப்படும்?
3
135. ”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
இறந்த காலம்
136. ”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?
கவிமணி தேசிக விநாயகம்
137. நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?
புன்செய்
138. இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம்.
பகல்
139. மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை.
சிலர்
140. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
141.திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?
உலகப்பொதுமறை
தெய்வநூல்
முப்பால்
உத்திரவேதம்
பொய்யாமொழி
வள்ளுவப்பயன்
142. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்?
குடிமக்கள் காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
முதல் காப்பியம்
தேசியக் காப்பியம்
முத்தமிழ்க் காப்பியம்
சமுதாயக் காப்பியம்
143. சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
மணநூல்
முக்தி நூல்
144. அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
நெடுந்தொகை
145. பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?
திருத்தொண்டர் புராணம்
146. இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?
குட்டித் தொல்காப்பியம்
147. வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?
நறுந்தொகை
148. மூதுரையின் சிறப்புப் பெயர்?
வாக்குண்டாம்
149. மணிமேகலையின் சிறப்புப் பெயர்?
மணிமேகலைத் துறவு
150. நாலடியாரின் சிறப்புப் பெயர்?
வேளாண் வேதம்
151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
தமிழ் மூவாயிரம்
152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
அறிவுரைக் கோவை
153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கலியாண சுந்தரம்
154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாதர்
155. நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
மீனாட்சி சுந்தரனார்
156. பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?
கதிரேசஞ் செட்டியார்
157. தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்தனார்
158. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
159. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்?
புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்
160. கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
161.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
வெ. இராமலிங்கம் பிள்ளை
162. குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
அழ. வள்ளியப்பா
163.தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
சேக்கிழார்
164. திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
திருஞானசம்பந்தர்
165. திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?
வாகீசர், தருமசேனர், அப்பர்
166. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?
அமுது அடியடைந்த அன்பர்
167. தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்?
சுந்தரர்
168. கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்?
கம்பர்
169. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்?
கவிராட்சஸன்
170. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி
171. திரையிசைத் திலகம் யார்?
மருதகாசி
172. _____அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்?
கிருஷ்ணதேவராயர்
173. தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
மெகஸ்தனிஸ்
174. ”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
ஆண்டாள்
175. ”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?
திருவள்ளுவர்
176. செஞ்சியை ஆண்ட மன்னர்களில் _____தான் புகழ் பெற்ற மன்னன்?
தேசிங்கு ராசன்
177. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
தமிழ்
178. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு
பேறு
179. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி
மாட்சி
180.”வானினும்” – இலக்கணக் குறிப்பு தருக?
உயர்வுச் சிறப்பும்மை
181. கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?
குழூஉக்குறி
182. ”கதவில்லை” – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?
முற்றியலுகரப் புணர்ச்சி
183. இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
கரியன்
184. ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?
பாசடை
185. அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
பைந்தமிழ்
186. தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?
வெற்றிலை
187. இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மரம்
188. திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மஞ்ஞை
189. திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பெற்றம்
190. வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மதம்
191. ”நல்குரவு” – எதிர்ச்சொல் தருக?
வலிமை
192. ”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?
பகை
193. “மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

194. ”தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது?
அருள்
195. ”வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?
வெகுள்
196. முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?
கேடு
197. ”எல்” எனும் சொல்லின் பொருள்?
கதிரவன்
198. “எள்” எனும் சொல்லின் பொருள்?
எண்ணை வித்து
199. ”சுளி” எனும் சொல்லின் பொருள்?
சினத்தல்
200. “சுழி” எனும் சொல்லின் பொருள்?
கடல்
201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன்
202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
வெளவால்
203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
முஃடீது
204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
போனம்
205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்
206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
அப்துல் ரகுமான்
207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
சுரதா
208. “நாடு” எனும் நூலின் ஆசிரியர்?
வாணிதாசன்
209. அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
அகம், அக்கா, அசதி, அச்சம்
210. எல்லை, எத்தன், எண், எலி, எஃகு – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
எஃகு, எண், எத்தன், எலி, எல்லை
211. ”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
காலப்பெயர்
212. “சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
தொழிற்பெயர்
213. “கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
கெடு
214. “சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
சா
215. “பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்
216. “காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
217. வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
வலப்பக்கச் சுவரில் எழுதாதே
218. அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
அவன் கவிஞன் அல்லன்
219. ”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்?
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
220. மாதவியின் மகளின் பெயர்?
ஐயை
221. பாலை நில மக்களின் பாட்டு?
வேட்டுவவரி
222. செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
எட்டாவது இடம்
223. ”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?
தமிழ் எழுத்துக்கள்
224. சிந்து, வைகை, யமுனை, கங்கை – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
கங்கை, சிந்து, யமுனை, வைகை
225. அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
எதுகை
226. “கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஒளவையார்
227. ”கரி” எனும் சொல் உணர்த்துவது?
யானை
228. மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8
229. சிங்கத்தின் இளமைப் பெயர்?
குருளை
230. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?
கனியன் பூங்குன்றனார்
231. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம்
232. ”தழல்” எனும் சொல்லின் பொருள்?
நெருப்பு
233. “ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
புதிய ஆத்திச்சூடி
234. “திணை” எனும் சொல்லின் பொருள்?
ஒழுக்கம்
235. கவிமணி எழுதிய நூல்கள்?
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி
236. ”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?
குறைத்தல்
237. முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?
அனிச்சம்
238. பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
நெடுநல்வாடை
239. ”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
அகநானூறு
240. ”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?
மணிமேகலை
241. தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
242. குமரகுருபரர் இயற்றிய நூல்?
நீதி விளக்கம்
243. பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
10
244. ”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
சேக்கிழார்
245. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஜி.யூ.போப்
246. ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
குறிஞ்சிப் பாட்டு
247. நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?
முச்சீர்
248. வெண்பாவின் வகைப்பாடு?
6
249. புறத்தினை வகைப்பாடு?
12
250. மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
வினைத் தொகை
252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்
254. ”ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்?
இரவீந்தரநாத் தாகூர்
255. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?
மகாகவி பாரதியார்
256. திருவருட்பாவை இயற்றியவர்?
இராமலிங்க அடிகளார்
257. ”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
இராமலிங்க அடிகளார்
258. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
கடலூர் மாவட்டம் மருதூர்
259. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா-சின்னம்மையார்
260. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
261. மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர்?
இராமலிங்க அடிகளார்
262. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்?
இராமலிங்க அடிகளார்
263. ”ஆர்வலர்”– பொருள் தருக?
அன்புடையவர்
264. “என்பு”– பொருள் தருக?
எலும்பு (உடல், பொருள், ஆவி)
265. ”வழக்கு”– பொருள் தருக?
வாழ்க்கை நெறி
266. ”ஈனும்”– பொருள் தருக?
தரும்
267. “ஆர்வம்”- பொருள் தருக?
விருப்பம்
268. “நண்பு”- பொருள் தருக?
நட்பு
269. “வையகம்”- பொருள் தருக?
உலகம்
270. ”மறம்”- பொருள் தருக?
வீரம்
271. ”என்பிலது”- பொருள் தருக?
எலும்பில்லாதது (புழு)
272. ”வற்றல் மரம்”- பொருள் தருக?
வாடிய மரம்
273. ”புறத்துறுப்பு”- பொருள் தருக?
உடல் உறுப்புகள்
274. திருக்குறளை இயற்றியவர்?
திருவள்ளுவர்
275. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்?
கி.மு.31
276. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்?
செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்
277. திருக்குறளின் பெரும் பிரிவுகள்?
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
278. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133
279. திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
10
280. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1330
281. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?
சரி
282. திருக்குறளின் வேறு பெயர்கள்?
முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை
283. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை?
கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
284. தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்?
உ.வே.சாமிநாதய்யர்
285. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்?
உ.வே.சாமிநாதய்யர்
286. தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்?
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
287. குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன?
99
288. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று?
குறிஞ்சிப் பாட்டு
289. குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்?
கபிலர்
290. தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்
291. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?
திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
292. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?
வேங்கடரத்தினம்
293. தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
294. தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?
சாமிநாதன்
295. உ.வே.சா.வின் விரிவாக்கம்?
உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்
296. உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?
ஆனந்த விகடன்
297. உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
என் சரிதம்
298. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்?
எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4;
299. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
2006
300. தமிழின் முதல் எழுத்து எது?

தொடர்ந்து வரும்..
301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?
மனிதன்
302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது?
வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு
303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற
304. நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது?
இன எழுத்துக்கள்
305. “தமக்குரியர்” – பிரித்து எழுதுக?
தமக்கு + உரியர்
306. “அன்பீனும்” – பிரித்து எழுதுக?
அன்பு + ஈனும்
307. ”நிழலருமை” – பிரித்து எழுதுக?
நிழல் + அருமை
308. ”வழக்கென்ப” – பிரித்து எழுதுக?
வழக்கு + என்ப
309. ”புறத்துறுப்பு” – பிரித்து எழுதுக?
புறம் + உறுப்பு
310. ”தரமில்லை” – பிரித்து எழுதுக?
தரம் + இல்லை
311. ”பருப்பு + உணவு” – சேர்த்து எழுதுக?
பருப்புணவு
312. ”கரும்பு + எங்கே” – சேர்த்து எழுதுக?
கரும்பெங்கே
313. “அவன் + அழுதான்” – சேர்த்து எழுதுக?
அவனழுதான்
314. ”அவள் + ஓடினாள்” – சேர்த்து எழுதுக?
அவளோடினாள்
315. ”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்?
திருவள்ளுவர்
316. நாலடியாரை இயற்றியவர்?
சமண முனிவர்
317. ”நாய்க்கால்” – பொருள் தருக?
நாயின் கால்
318. ”ஈக்கால்” – பொருள் தருக?
ஈயின் கால்
319. ”அணியர்” – பொருள் தருக?
நெருங்கி இருப்பவர்
320. “என்னாம்?” – பொருள் தருக?
என்ன பயன்
321.”சேய்” – பொருள் தருக?
தூரம்
322. ”செய்” – பொருள் தருக?
வயல்
323. மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?
1883
324. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
126
325. ”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?
தாரா பாரதி
326. ”அவல்” – பொருள் தருக?
பள்ளம்
327. ”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்?
கல்யாண சுந்தரம்
328. மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது எது?
மூவிடம்
329. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக?
ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு
330. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
107
331. ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா? தவறா?
சரி
332. ”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?
மதிரை
333. ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க?
ஈச்சந்தட்டு
334. யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்?
வேழம்
335. ”முயற்சி செய்” – எத்தொடர் எனக் கூறுக?
கட்டளைத் தொடர்
336. பாரதிதாசனின் இயற்பெயர்?
கனக சுப்புரத்தினம்
337. ”அகரம் + ஆதி” – சேர்த்தெழுதுக?
அகராதி
338. “பைங்குவளை” – பிரித்தெழுதுக?
பசுமை + குவளை
339. தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?
தமிழகம்
340. ”கயல்விழி” என்பது?
உவமைத் தொகை
341. மா, பலா, வாழை என்பது?
உம்மைத் தொகை
342. சென்னையில் ______பெயரில் நூலகம் உள்ளது?
தேவநேயப்பாவாணர்
343. “அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்?
கண்ணதாசன்
344. ”மதிமுகம்” உருவகமாய் மாறும் போது ____________ ஆகும்?
முகமதி
345. ”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது?
முல்லைப் பாட்டு
346. குமார சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
காளிதாஸ்
347. குமார சம்பவம் என்றால் என்ன?
முருகன் பிறந்த கதை
348. துரியோதனின் தங்கை பெயர்?
துஷாலா
349. இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்?
கைகேயி
350. வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
சமஸ்கிருதம்
351. ”தரணி” என்றால் என்ன?
பூமி
352. 1964-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
சிலப்பதிகாரம்
353. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்?
நோம் சாம் சுகி
354. தமிழ் மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
42
355. பணியும் குணம் கொண்டது?
பெருமை
356. நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்?
குமர குருபரர்
357. உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது?
ஒப்பம்
358. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர்
359. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
126
360. இரண்டாம் வேற்றுமை உருபு?

361. விடை வகைகள்?
8
362. யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?
அமிர்த சாகரர்
363. நான்கு சீர்கள் கொண்ட அடி?
அளவடி
364. ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
முற்று எதுகை
365. ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
அகவற்பா
366. செந்தமிழ் என்பது?
பண்புத் தொகை
367. மோர்க்குடம் என்பது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
368. வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?
முதல் வேற்றுமை
369. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
370. சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
ரா.பி.சேதுப்பிள்ளை
371. தொழிற்பெயர் _________ வகைப்படும்?
3
372. கவிப்பாவிற்குரிய ஓசை?
துள்ளல்
373. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
கவிமணி
374. உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்?
ஒட்டக்கூத்தர்
375. அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
கண்ணதாசன்
376. தேவாரம் பாடிய மூவர்?
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
377. பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?
பாரதிதாசன்
378. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?
யாமம்
379. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
மாலை
380. மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?
வைகறை
381. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
நண்பகல்
382. ”நரி கத்த, ஆந்தை பாட” – மரபு வழுவை நீக்குக?
நரி ஊளையிட, ஆந்தை அலற
383. மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?
பள்ளு
384. திரிவேணி சங்கமம்?
சிந்து, கங்கை, சரஸ்வதி
385. மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
ஸ்ரீராகவேந்திரன்

No comments:

Post a Comment